கொழும்பில் ஆயிரக்கணக்கான சாரதிகளை காட்டிக்கொடுத்த கமரா
கொழும்பில் போக்குவரத்து விதிகளை மீறிய 4 ஆயிரத்து 584 சாரதிகள் சிக்கியுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தன கொடிதுவக்கு தெரிவித்தார்.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்ட அமலாக்க முறைமையில் இந்த சாரதிகள் சிக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விதி மீறல்களுடன் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்களின் வாகனங்களின் எண்கள் மோட்டார் போக்குவரத்துத் துறையின் அமைப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியின் பொலிஸ் நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
அதற்கமைய, இதுவரையில் அடையாளம் காணப்பட்ட 1022 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஒற்றை அல்லது இரட்டைக் கோட்டைக் கடந்து முந்திச் செல்வது, சமிக்ஞைகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவது என பல ஓட்டுநர்கள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் கமராக்களை பொலிஸ் நெருங்கிய கண்காணிப்பு கமரா பிரிவின் அமைப்புடன் இணைத்து இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.
கண்காணிப்பு கமரா
எதிர்காலத்தில் வீதி தவறுகளை மேற்கொள்ளும் சாரதிகளின் காணொளிகளை அந்தந்த இடங்கள் மற்றும் திகதிகளுடன் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கும் முறைமையொன்று நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





பிரித்தானியாவின் பிரபலமான ஐஸ்கிரீம் வியாபாரிக்கு 8 முறை கத்திக்குத்து: இரண்டு பேர் கைது! News Lankasri

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
