கொழும்பு பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புகளைத் தொடர்ந்து, கடந்த மூன்று நாட்கள் சரிவைச் சந்தித்த கொழும்பு பங்குச் சந்தையின் குறியீடுகள், இன்று (8) மீண்டும் உயர்வை அடைந்தன.
அதன்படி, அனைத்து பங்கு விலைக் குறியீடும் 467.26 புள்ளிகள் உயர்ந்து 15,127.71 புள்ளிகளில் நிறைவடைந்தது.
வர்த்தக நடவடிக்கை
அதே வேளையில், S&P SL20, விலைக்குறியீடு 190.29 புள்ளிகள் உயர்ந்து 4,455.13 புள்ளிகளில் நிறைவடைந்தது.

இதேவேளை, நேற்றைய தினம் (07.04.2025) கொழும்பு பங்குச் சந்தையில் S&P SL20 குறியீடுகள் முந்தைய நாளுடன் ஒப்பிடும் போது 5%க்கும் அதிகமாக சரிந்ததால், காலை 9.51 மணியளவில் தினசரி வர்த்தக நடவடிக்கை 30 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டது.
அத்துடன் வர்த்தகம் 2.89 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri