கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை செலவில் விருந்து: துறைமுக அதிகாரசபை விளக்கம்
கொழும்பு துறைமுகத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுவிற்கு பெருந்தொகை செலவில் கப்பலில் விருந்தொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக வெளியான செய்திகளை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுத்துள்ளது.
இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கப்பலில் இருந்தபோது உபசரிக்கும் காணொளி காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு இலங்கை துறைமுக அதிகாரசபை விளக்கமளித்துள்ளது.

இலங்கையில் ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வங்கிகளில் வட்டி கிடைக்கும் வைப்பாளரின் நிலை! சிரேஷ்ட விரிவுரையாளரின் தகவல்
அபிவிருத்தித் திட்டங்கள்
கொழும்பு துறைமுகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அரசியல்வாதிகள், பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வழக்கமான கப்பல் பயணங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்திருந்ததாக துறைமுக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், உணவு அல்லது வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் தாம் பெருந்தொகை பணத்தை செலவு செய்யவில்லை என்றும் துறைமுக அதிகாரசபை விளக்கமளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 15 மணி நேரம் முன்

சீனாவின் கட்டுப்பாடுகள்., ரூ.5,000 கோடி மதிப்பில் Rare Earth Magnet உற்பத்தி திட்டத்தில் இந்தியா News Lankasri

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam

இந்தியாவில் சிக்கியுள்ள பிரித்தானிய F-35B போர் விமானம் - ஏர் இந்தியாவின் சலுகையை மறுத்த Royal Navy News Lankasri

இஸ்ரேலுக்கு விலையுர்ந்த சேதத்தை ஏற்படுத்திய ஈரான் - 22 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட விஞ்ஞான தரவுகள் அழிப்பு News Lankasri
