50 ஆண்டுகளுக்கு மேல் உழைப்பை நம்பி வாழும் நபர்! அரசாங்கம் மீது வெளிப்படுத்தப்படும் ஆத்திரம் (Video)
வாக்களிப்பதில் விருப்பமேயில்லை என நபரொருவர் தனது ஆதங்கத்தை கடுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
கொழும்பில் சிறிய பிளாஸ்டிக்கிலான வீட்டு உபயோக பொருட்களை விற்று தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் 64 வயது முதியவரொருவர் எமது செய்திப்பிரிவினருடன் பேசும் போது இந்த விடயத்தை பகிர்ந்து கொண்டார்.
அத்துடன், எம்மிடம் வாக்குகளை பெற்றுக் கொண்டு நாடாளுமன்றம் சென்று அரசியல்வாதிகள் அவர்களின் வேலைகளை பார்க்கிறார்கள். மக்கள் உண்ண உணவு இல்லாமல் இருக்கிறார்கள்.
மக்களுக்கு நான் சொல்கிறேன் நல்ல ஒருவர் கையில் நாட்டை ஒப்படையுங்கள். நம்முடைய காலம் முடிந்து விட்டது. இனி வரப்போகும் எமது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் 12 வயதில் இருந்து உழைப்பை நம்பி வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான தொகுப்பு காணொளியாக,
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan