கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முடியாமல் திணறும் அநுர அரசு
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்திக்கு மேலும் 9 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. எனினும் பெரும்பான்மை அதிகாரத்தைப் பெறுவது தொடர்பான நெருக்கடி நிலைமை இன்னும் நிலவுகிறது.
அரசாங்கம் பெரும்பான்மை அதிகாரத்தை இழந்துள்ள நிலையில் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று முன்தினம் பெலவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

கொழும்பில் இளம் யுவதிக்கு உதவிய குடும்பம் ஒன்றுக்கு அதிர்ச்சி : கொலை மிரட்டல் விடுக்கும் மர்ம கும்பல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் போட்டியிட்டு ஆசனங்களை வென்ற ஜனநாயக தேசியக் கூட்டணி மற்றும் சில கட்சிகளின் பிரதிநிதிகளும், மூன்று சுயேட்சை குழுக்களின் பிரதிநிதிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
கொழும்பு மாநகர சபை
மேலும் அவர்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்க இணங்கியுள்ளனர். இந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கொழும்பு மாநகர சபையில் ஜனநாயக தேசியக் கூட்டணி ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.
அதே நேரத்தில் ஐக்கிய சமாதான கட்சி 2 ஆசனங்களைக் கைப்பற்றியது. மேலும், கலந்துரையாடலில் பங்கேற்ற சுயேட்சைக் குழு எண் இரண்டில் ஒரு உறுப்பினர் பதவியும், சுயேட்சைக் குழு எண் மூன்றில் 3 உறுப்பினர் பதவிகளும், சுயேட்சைக் குழு எண் நான்கில் 2 உறுப்பினர் பதவிகளும் இருந்தன.
அதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி 9 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறும். இம்முறை கொழும்பு மாநகர சபையின் அமைப்பிற்கமைய, தேசிய மக்கள் சக்திக்கு 48 உறுப்பினர்கள் கிடைத்துள்ளன.
மேலும் அந்த 9 உறுப்பினர் பதவிகளையும் ஒன்றாகச் சேர்த்தால், அவர்களுக்கு வழங்கப்படும் மொத்த உறுப்பினர் பதவிகளின் எண்ணிக்கை 57 ஆகும்.
எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை
எனினும் அந்த 9 இடங்களை விட்டுக்கொடுத்தாலும், எதிர்க்கட்சிக்கு இன்னும் 60 இடங்கள் இருக்கும். அதற்கமைய, எதிர்க்கட்சி இன்னும் பெரும்பான்மை பலத்தைக் கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனநாயக தேசிய கூட்டணி எந்த கட்சியை ஆதரிக்கும் என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியிடப்படும் என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஷ குமார நேற்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 9 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
