காலிமுகத்திடலில் இருந்து திடீரென சென்ற பொலிஸார்! சிறிது நேரத்தில் குவிந்த படையினர் - நேரடி ரிப்போர்ட் (Video)
கொழும்பில் இன்று அதிகாலை காலிமுகத்திடல் பகுதியில் இராணுவம், பொலிஸ் விசேட அதிரடி படையினர் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்து போராட்டக்காரர்களை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் சம்பவ இடத்தில் இருந்த இளைஞரொருவர் அப்பகுதியில் பதிவாகிய மற்றும் தான் நேரடியாக பார்த்த சம்பவங்களை எமது செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறுகையில், இன்று அதிகாலை 1.30 மணியளவில் பாதுகாப்பிற்காக இருந்த பொலிஸார் அனைவரும் காலிமுகத்திடல் பகுதியில் இருந்து சென்றுவிட்டனர்.
கொழும்பில் நள்ளிரவில் ஏற்பட்ட பதற்றம் - இராணுவ முற்றுகைக்கான காரணம் அம்பலம் |
இதனை தொடர்ந்து பெருமளவு விசேட அதிரடிப்படையினர் திடீரென இப்பகுதியில் குவிக்கப்பட்டு போராட்டக்களப்பகுதியை முழுமையாக சுற்றிவளைத்துவிட்டனர்.
எனினும் இந்த விடயம் தொடர்பில் எமக்கு ஏற்கனவே தகவல் கிடைத்திருந்தது. நாங்களும் விழிப்பாகவே இருந்தோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காலிமுகத்திடல் பகுதியில் தாக்குதலில் காயமடைந்தவர்களை நோயாளர் காவு வண்டி மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
