கொழும்பில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் : விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
கொழும்பு தெமட்டகொடையில் உள்ள ஒரு வெறிச்சோடிய வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கொலைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்
தெமட்டகொடை, பேஸ் லைன் சாலையில் உள்ள களனி வெளி தொடருந்து பாதைக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 மி.மீ தோட்டாக்கள், இரண்டு தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 துப்பாக்கி மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் விசாரணையில், பொரளை பகுதியில் இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய மற்றொரு பிரிவைச் சேர்ந்த ஒருவரைக் கொல்வதற்காக இந்த துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன்படி பொரளை பகுதியில் இந்த குழுக்களுக்கு இடையே இதற்கு முன்பு பல மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan