ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை விடுத்துள்ள எச்சரிக்கை
உரிய அனுமதியின்றி அல்லது உரிய கட்டணங்களை செலுத்தாமல், தேர்தல் தொடர்பான பிரசாரத்திற்காக நகர வீதிகள், வீதிகள் அல்லது பொது இடங்களை அலங்கரிக்கும் எந்தவொரு வேட்பாளர் அல்லது அரசியல் கட்சியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் ஜூலை 26ஆம் திகதி அறிவிக்கப்பட்டவுடன், இலங்கை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இது தொடர்பில் மாநகரசபை கடிதம் எழுதியுள்ளது.
சட்ட நடவடிக்கை
நகரை தமது சின்னங்களைக் கொண்டு அலங்கரிக்க விரும்பும் எந்தவொரு வேட்பாளரும் அல்லது அரசியல் கட்சியும் உரிய அனுமதியைப் பெற வேண்டும்.

இல்லையேல்,அத்தகைய பிரசாரப் பொருட்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அகற்றப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் சிஎம்சி பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri