மலேசியாவிலிருந்து வந்த தொழிலதிபரிடம் சிக்கிய கோடி ரூபா பெறுமதியுடைய பொருள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில்,ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருளுடன் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேக நபர் கொழும்பு, மருதானையில் வர்த்தக நிலையத்தினை நடத்தும் தொழிலதிபர் என்று கூறப்படுகின்றது.

இவர் மலேசியாவிலிருந்து 'குஷ்' போதைப்பொருளை வாங்கி, அங்கிருந்து சிங்கப்பூருக்கு, இன்று அதிகாலை 12.45 மணிக்கு சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானம் SQ-468 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவர் 3 பொதிகளில் 1.024 கிலோகிராம் 'குஷ்' போதைப்பொருளை தனது கைப்பையில் நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரும், போதைப்பொருள் கையிருப்பும் இன்று (20) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 17 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan