வெனிசுலாவில் நிலவும் பதற்றம்! கொலம்பிய ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ வெனிசுலா எல்லையில் பொதுப் படைகளை நிலைநிறுத்துவதாக அறிவித்துள்ளார்.
போகோட்டாவிலிருந்து, கராகஸ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அமெரிக்க தாக்குதல்களைத் தொடர்ந்து வெனிசுலா அகதிகள் பெருமளவில் வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவு
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் பிடிக்கப்பட்டதாக தெரிவித்ததிலிருந்து அந்த பகுதிகள் பரபரப்பாக உள்ளது.

கராகஸில் முதல் வெடிப்புகள் பதிவானதிலிருந்து பெட்ரோ பலமுறை அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கொலம்பியாவும் வெனிசுலாவும் 2,000 கி.மீ.க்கும் அதிகமான நில எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளன. வரலாறு முழுவதும், இரு நாடுகளிலும் பொருளாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக இருபுறமும் மில்லியன் கணக்கான மக்களை தஞ்சம் புகுந்துள்ளனர்.
எனவே கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்குப் பிறகு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
தமிழர்களின் ஆலயங்களை அழிக்கும் அரசாங்கத்திற்கு தையிட்டியை உடைப்பதில் என்ன தடை.. சிறீதரன் எம்.பி கேள்வி