மலையக தமிழர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
இந்திய வம்சாவளியினர் என்று அழைக்கப்படுபவர்கள் இனி மலையகத் தமிழர்கள் என அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று மலையக தமிழர் இன அடையாளத்திற்கான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மலையக தமிழர் இன அடையாளத்திற்கான அமைப்பானது இன்று(07.02.2024) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய குடித்தொகை மதிப்பீட்டு படிவம்
200 வருடங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்கள், இந்திய வம்சாவளியினர் என அழைக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இனிவரும் காலங்களிலும் தம்மை இந்திய வம்சாவளியினர் என அடையாளப்படுத்தாது மலையகத் தமிழர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய குடித்தொகை மதிப்பீட்டு படிவத்தில் மலையக தமிழர் இன அடையாளத்தைச் சேர்த்துக் கொள்ளுமாறு கோரி தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய படிவங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |