எரிசக்தி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
மின்சார சபை மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு செயலாளருக்கு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Collective agreements entered with Trade unions of CEB & CPC for 25% salary increment every 3 years, annual bonuses, allowances & other benefits will not be continued or renewed. I have instructed Secretary to the Min of Power & Energy to commence the process to terminate them.
— Kanchana Wijesekera (@kanchana_wij) March 10, 2023
ஒவ்வொரு 03 வருடங்களுக்கும் 25% சம்பளத்தை அதிகரிக்கும் வருடாந்த போனஸ் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து இவ்வாறு விலக அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
