கிளிநொச்சியில் தென்னை முக்கோண வலய செயற்திட்டம்
கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் வடமாகாண் தென்னை முக்கோண வலய செயற்திட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
இந்த நிகழ்வு இன்று (13.12.2023) காலை 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பளை பிரதேச கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.குறித்த நிகழ்வில் தென்னை பயிர் செய்கை அதிகளவில் மேற்கொள்ள எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக காட்சிபடுத்தப்பட்டு கள உத்தியோகத்தர்களிடம் அதற்கான தீர்வுகளும் கேட்டறியப்பட்டது.
வடமாகாணத்தில் இராணுவத்தினரிடமும்,வனஜீவராசிகள் திணைக்களம்,மற்றும் தரிசு நிலங்கள் உள்ளடங்களாக ஏறத்தாழ 40000 ஏக்கர் காணிகள் உள்ளதோடு காணிகளை தென்னை பயிர்ச்செய்கைக்காக விடுவித்தால் 66.35மில்லியன் தேங்காய்கள் வழங்கி அதன்மூலம் 5828மில்லியன் ரூபாய் தேசிய வருமானமாக பெறலாம் என கள உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் தென்னை சார்ந்த சுற்றுலா மையங்களினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒருங்கிணைந்த பண்ணைகளை அமைத்தல். வெளிநாட்டு முதலீட்டாளர்களை தென்னை சார்ந்த தொழிற்துறைகளை ஆரம்பிக்க ஊக்குவித்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

இத்தனை கோடிக்கு விலை போய்யுள்ளதா மதராஸி படம்.. தமிழ்நாட்டில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன் Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
