தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் இலங்கையர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்! வெளியான முக்கிய தகவல்
நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கும் வரிசையில் காத்திருக்க நேரிடும் சாத்தியங்கள் காணப்படுவதாக பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாட்டை உருவாக்கி, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் எண்ணெய் விலையை அதிகரிக்க பல்தேசிய நிறுவனங்கள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புத்திக்க டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தேங்காய் எண்ணெய் உற்பத்திகளை களஞ்சியப்படுத்தி வைத்துக் கொண்டு புத்தாண்டு காலத்தில் பாரிய லாபமீட்ட முயற்சிக்கப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டு காலத்தில் தேங்காய் எண்ணெய்க்கு மக்கள் வரிசையில் காத்திருக்க நேரிடும் வகையில் பல்தேசிய நிறுவனங்கள் கையிருப்புக்களை பதுக்கி வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan