இலங்கைக்கு வந்தடைந்த மூன்று நிலக்கரி கப்பல்கள்!
நுரைச்சோலை அனல் மின் நிலைய செயற்பாடுகளுக்காகத் தருவிக்கப்பட்ட நிலக்கரியை ஏற்றிக் கொண்டு மேலும் 3 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
அதன்படி, புத்தளத்தை வந்தடைந்த 17, 18, 19 ஆகிய நிலக்கரி கப்பல்களை இறக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஒரு கப்பலிலிருந்து 60,000 மெட்ரிக் தொன் வீதம் நிலக்கரி இறக்கப்படும். இந்த நிலக்கரி கையிருப்புகளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் மூலம் தொடர்ச்சியான மின் விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.