அமெரிக்காவின் ஒரேயொரு இலங்கை செய்தித்தாளின் இணை நிறுவுனர் காலமானார்
அமெரிக்காவில் வெளியான ஒரேயோரு இலங்கை செய்தித்தாளின் இணை நிறுவுனரான ஹசினா லீலாரத்ன (Hassina Leelarathna) தமது 73ஆவது வயதில் காலமானார்.
இலங்கையில் பேரழிவுகள் ஏற்பட்டபோது புலம்பெயர்ந்தோரை உதவிக்கு ஊக்கப்படுத்திய ஆர்வலராக ஹசினா லீலாரத்ன செயற்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக நுரையீரல் புற்றுநோயுடன் போராடி வந்த லீலாரத்ன, ஷெர்மன் ஓக்ஸில் கடந்த அக்டோபர் 17ஆம் திகதி மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீலாரத்ன தனது தாயகமான இலங்கையிலிருந்து கலிபோர்னியாவுக்கு சென்ற பிறகு, 1981ஆம் ஆண்டு தனது கணவர் தீப்த லீலாரத்னாவுடன் இணைந்து “ஸ்ரீலங்கன் எக்ஸ்பிரஷ்” என்ற செய்தித்தாளை அவர் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.