புதுக்குடியிருப்பில் ஆரம்பமான Clean Sri Lanka திட்டம்
''ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை'' என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ‘தூய்மையான இலங்கை’(Clean Sri Lanka) எனும் திட்டமானது புதுக்குடியிருப்பு - திம்பிலி பகுதியில் இன்றையதினம்(12) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு(Mullaitivu) - புதுக்குடியிருப்பு - திம்பிலி பகுதியில் அமைந்திருந்த நெல் களஞ்சிய சாலையானது கோவிட் காலப்பகுதிக்கு பின்னர் நெல் கொள்வனவு செய்யப்படாமையால் பல வருடங்களாக பாவனையற்று காணப்படுகின்றது.
தூய்மையான இலங்கை
இதனால் பல சமூக சீர்கேடுகள், சட்டவிரோத செயற்பாடுகளும் குறித்த இடத்தில் இடம்பெறுவதனால் குறித்த இடம் தெரிவு செய்யப்பட்டு தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) எனும் செயற்திட்டதின் கீழ் பொதுமக்களால் இன்றையதினம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் பொதுமக்களிடையே கலாசார உணர்வை மேம்படுத்தும் வகையில் முதற்கட்டமாக எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பொங்கல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள், கிராம மக்கள் இணைந்து குறித்த பணியினை மேற்கொண்டிருந்தார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam