மட்டக்களப்பு மாநகரசபையில் விசேட வேலைத்திட்டம்
மட்டக்களப்பு மாநகரசபையினை குப்பை கூழங்கள் அற்ற இடமாகவும் இலஞ்ச ஊழல்கள் அற்ற தூய்மையான பகுதியாகவும் மாற்றும் வகையிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு அமைவாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்சயன் தலைமையில் நடைபெற்றது.
இணையத்தளம் அங்குரார்ப்பணம்
இதன்போது நீங்கள் இலஞ்சம்,ஊழல், தரகுப்பணம் பெறாத அலுவலக வளாகத்தினுள் நுழைகின்றீர்கள், சட்டரீதியற்ற பணப்பரிமாற்றம் தடைசெய்யப்படுகின்றது, இலஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட முறைப்பாட்டு இலக்கம் கொண்ட பதாகை திறந்து வைக்கப்பட்டதுடன் ஆங்கில மொழிப்பதாகை நடப்பட்டது.
அதனை தொடர்ந்து மாநகர சபையின் சேவைகளை அறிந்து கொள்ளவும் அதன் சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் மாநகரம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அத்துடன் பொதுமக்கள் கழிவுகளை வீதிகளில் எறிவதை தடுக்கும் வகையிலும் அவ்வாறானவர்களை கண்டுபிடிப்பதற்காக தொலைபேசி சி.சி.டிவி கேமரா பொருத்தும் செயற்பாடும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |