கிளீன் சிறீலங்கா விவகாரம் : கைவிடப்பட்ட தனியார் பேருந்து சங்கத்தின் வேலைநிறுத்தப் போராட்டம்
கிளீன் சிறீலங்கா (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போக்குவரத்து சோதனை நடவடிக்கைக்கு எதிராக, தனியார் பேருந்து சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் எல்லை மீறி பேருந்துகளை சோதனையிடுவதாகவும், தேவையற்ற முறைகளில் செயற்படுவதாகவும் இதனால் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் நேற்று (07) அறிவித்திருந்தது.
வேலைநிறுத்தப் போராட்டம்
இது தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று (08) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடலையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
