ரணில் தொடர்பான விசாரணையில் CIDயின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம்
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று காலை 9.00 மணிக்கு குற்றப் புலனாய்வுத் துறை முன் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
எனினும் இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களம் அவருக்கு அறிவித்துள்ளதென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் நோக்கில் முன்னாள் செயலாளர் அழைக்கப்பட்டிருந்தார்.
குற்றப் புலனாய்வு திணைக்களம்
குற்றப் புலனாய்வு திணைக்களம் இதற்கு முன்னரும் சமன் ஏக்கநாயக்கவிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது..

இந்நிலையில் தொடர்ந்தும் விசாரணை செய்யும் முடிவில் மாற்றம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam