அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட தொடருந்து பயணச்சீட்டுகள்! விசாரணைகள் ஆரம்பம்
தொடருந்து திணைக்களத்தினால் இணையதளத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுக்களை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை தொடர்பில் குற்ற புலனாய்வுத் திணைக்களம் நேற்று(20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முறைப்பாடு
அதன்படி, குறுகிய காலத்தில் இணையத்தளத்தில் பயணச்சீட்டுகளை பெற்று அதிக விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தொடருந்து திணைக்களம் அளித்த முறைபாட்டை தொடர்ந்து இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்திற்கு உண்மைகள் தெரிவிக்கப்படும் எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
