மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவு! ஆனந்த விஜேபால சுட்டிக்காட்டு
மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறைக்குக் கிடைக்கும் முறைப்பாடுகள் மீதான விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் மாகாண மட்டத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவுகளைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறை
அதன்படி, எதிர்காலத்தில் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஒவ்வொரு மாகாண மக்களும் மாகாண மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு வழங்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணைகளை மேலும் திறம்படச் செய்வதும், அந்தத் துறைக்கு வரும் முறைப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறைப்பதும், மாகாண மட்டத்தில் தொடர்புடைய விசாரணைகளைத் தொடங்குவதும் இந்த விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதன் முக்கிய நோக்கமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri
