விசாரணைகளுக்காக அமெரிக்க உளவு துறையின் உதவியை நாடும் இலங்கை
இலங்கையில் கடந்த மே மாதம் ஏற்பட்ட கலவரமான நிலைமைக்கு மத்தியில் சொத்துக்களுக்கு சேதம் விளைத்து, வீடுகளுக்கு தீவைத்தவர்கள் சம்பந்தமான சமூக வலைத்தளங்களில் இருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அடையாளம் காண இலங்கை அரசு, அமெரிக்கவின் உதவியை கோரியுள்ளது.
சீ.ஐ.ஏவிடம் உதவியை கோரும் சி.ஐ.டி
இதற்கு அமைய சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றவியல் விசாரணை திணைக்களம் அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சீ.ஐ.ஏ.விடம் உதவியை கோரியுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அழிப்பு
வன்முறை சம்பவங்கள் நடத்த தினங்களில் அவற்றில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக விசாரணைகள் நடந்து வருவதால், சம்பந்தப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அழித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்களின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.
சுமார் 75 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய டிராவல்ஸ் தொடங்கிய கதிர், யாருடைய பெயர் வைத்துள்ளார் தெரியுமா?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
