மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் ஆராதனை நிகழ்வுகள்
மட்டக்களப்பு மாவட்டம், குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனை இடம்பெற்றது.
ஆலய அருட்தந்தை ஹர்சதன் ரிச்சட்ஸனின் தலைமையில் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.
இந்த ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில விசேட பாதுகாப்பு கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




செய்தி - ருசாத்
முதலாம் இணைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல கிறிஸ்தவ தேவ ஆலயங்களிலும் விசேட நத்தார் வழிபாடுகள் இடம்பெற்றன.
இந்த நிலையில் மட்டக்களப்பு சியோன் தேவாலய பிரதான கிறிஸ்மஸ் ஆராதனை தேவாலய பிரதான போதகர் ரோஷன் மகேசன் தலைமையில் இடம்பெற்றது.
விசேட பிரார்த்தனை
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக விசேட பிரார்த்தனைகளும் இதன்போது இடம்பெற்றது.
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிறிஸ்மஸ் பண்டிகை எளிமையான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டி வழிபாடுகளில் கிறிஸ்தவ மக்கள் ஈடுபட்டனர்.




