பொரளை தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம்!விசாரணையில் வெளியான தகவல்
பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டினை வைப்பதற்காக நபர் ஒருவருக்கு 50,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொரளை கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், எம்பிலிபிட்டி , பனாமுர பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம், தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அவரிடம் அரசபுலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின் போது பணம் வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.
கைக்குண்டினை வைப்பதற்கு 50,000 ரூபாய் சந்தேகநபருக்கு வழங்கப்பட்டதாகவும்,கைக்குண்டினை வைக்குமாறு கூறிய சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
