இலங்கையில் ஆறு மாதத்தில் பல கோடி ரூபாவினை சம்பாதித்த சீனர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சீன மொழிபெயர்ப்பாளராக இலங்கைக்கு வந்து உரிமம் இன்றி இரத்தினக்கல் வியாபாரம் செய்து குறுகிய 06 மாத காலத்தில் சம்பாதித்த 36 1/2 கோடி ரூபாவினை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு 3 1/2 கோடி ரூபா அபராதம் விதித்த நீதிபதி, இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து 15 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளார்.
இலங்கையில் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண அதிகாரசபையின் அனுமதிப்பத்திரம் இன்றி வியாபாரம் செய்த சு ஷென் என்ற சீன நாட்டவருக்கே தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி விடுத்துள்ள கோரிக்கை
2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் 1 ஆம் திகதி முதல் 2018 பெப்ரவரி 28 ஆம் திகதி வரை இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் வர்த்தகத்தை இலங்கையில் நடத்தியமைக்காக மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான நீண்ட விசாரணைக்குப் பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டுக்கு கேடு விளைவிக்கும் மற்றைய வெளிநாட்டவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் பிரதிவாதியை கடுமையாக தண்டிக்குமாறும் அரசாங்கத் தரப்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் இரத்தினக் கற்கள் வர்த்தகம் செய்வதற்கு உரிமம் தேவை என்பது தனது கட்சிக்காரருக்கு தெரியாத காரணத்தினால் குறைந்த தண்டனையை வழங்குமாறும் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
