இலங்கையில் இணையம் ஊடாக நடக்கும் மோசடிகள்! அதிரடியாக கைதான 134 வெளிநாட்டவர்கள்
அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலையில், ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு பெரிய அளவிலான நடவடிக்கையில் 134 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகளுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுகளும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும் இணைந்து இந்தச் சோதனையை நடத்தினர்.
இணையவழி மோசடி நடவடிக்கை
சந்தேக நபர்கள் தங்கியிருந்த இவ்விரு பகுதிகளிலும் உள்ள ஐந்து தங்குமிடங்களில் அதிகாரிகள் ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 126 சீன நாட்டினர், நான்கு மியான்மர் நாட்டினர் மற்றும் நான்கு தைவான் நாட்டினர் அடங்குவர். இவர்கள் அந்த இடங்களிலிருந்து செயல்பட்ட இணையவழி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகின்றனர்.
இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஏராளமான மடிக்கணினிகள், கைபேசிகள் மற்றும் பிற தொழில்நுட்ப உபகரணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
காணொளியை காண்க இங்கே அழுத்தவும்..