கொழும்பில் சீனப் பொறியியலாளர் மரணம்
கொழும்பு - கொம்பனி வீதியில், யூனியன் பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்புத் தொகுதியின் 8ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து சீனப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதவிப் பொறியியலாளராகப் பணியாற்றிய 24 வயது சீனப் பிரஜையே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த சீன இளைஞர்
நேற்றைய தினம் (04.06.2023) மாலை 5 மணியளவிலேயே இவர், கட்டடத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த சீன இளைஞர், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |