தலாய் லாமாவின் இலங்கை விஜயத்தை எதிர்க்கும் சீனா
திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் (Dalai Lama) இலங்கை நாட்டிற்கான விஜயத்தை சீனா (China) தடுத்து வருவதாக இலங்கையின் உயர்மட்ட பௌத்த தலைவர் வஸ்கடுவே மஹிந்தவங்ச (Vaskatuve Mahindawangsa) தெரிவித்துள்ளார்.
புத்தரின் கபிலவஸ்து நினைவுச்சின்னங்களின் ஒரு பகுதியை தலாய் லாமாவிடம் ஒப்படைப்பதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில், இந்திய ஊடகம் ஒன்றின் பிரத்தியேக நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீனா எதிர்ப்பு
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "நாங்கள் தலாய் லாமாவை மதிக்கிறோம், அவரை இலங்கைக்கு அழைத்தோம், ஆனால் சீனா அதை விரும்பவில்லை. எங்கள் அரசுக்கு எதிராக சீனா அழுத்தம் கொடுத்தது, எங்களுக்கு அது பிடிக்கவில்லை.
அவர் ஒரு பௌத்த தலைவர், அவருக்கு சுதந்திரம் உள்ளது. அழைப்பு விடுக்கும் சுதந்திரம் எமக்கு உள்ளது.” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
