தலாய் லாமாவின் இலங்கை விஜயத்தை எதிர்க்கும் சீனா
திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் (Dalai Lama) இலங்கை நாட்டிற்கான விஜயத்தை சீனா (China) தடுத்து வருவதாக இலங்கையின் உயர்மட்ட பௌத்த தலைவர் வஸ்கடுவே மஹிந்தவங்ச (Vaskatuve Mahindawangsa) தெரிவித்துள்ளார்.
புத்தரின் கபிலவஸ்து நினைவுச்சின்னங்களின் ஒரு பகுதியை தலாய் லாமாவிடம் ஒப்படைப்பதற்காக இந்தியாவுக்கு சென்றுள்ள நிலையில், இந்திய ஊடகம் ஒன்றின் பிரத்தியேக நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சீனா எதிர்ப்பு
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, "நாங்கள் தலாய் லாமாவை மதிக்கிறோம், அவரை இலங்கைக்கு அழைத்தோம், ஆனால் சீனா அதை விரும்பவில்லை. எங்கள் அரசுக்கு எதிராக சீனா அழுத்தம் கொடுத்தது, எங்களுக்கு அது பிடிக்கவில்லை.

அவர் ஒரு பௌத்த தலைவர், அவருக்கு சுதந்திரம் உள்ளது. அழைப்பு விடுக்கும் சுதந்திரம் எமக்கு உள்ளது.” என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 10 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam