தொடர்ந்தும் சீனாவிடம் கடன்களை வாங்கிக்குவிக்கும் இலங்கை!
சீனாவின் பெய்ஜிங்கைத் தலைமையகமாகக் கொண்டுள்ள ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் இருந்து இலங்கை கடன் கோரியுள்ளது.
பசுமை அபிவிருத்தித் திட்டங்களுக்காக இலங்கை 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய உட்கட்டமைப்பு வங்கி, 2016 ஜனவரியில் திறக்கப்பட்டது. இந்த வங்கியின் ஸ்தாபக உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்றாகும்.
இந்தநிலையில் ஆடை உற்பத்திக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்யவும் இலங்கை, சீனாவிடம் இருந்து கடன் ஏற்பாட்டையும் கோரியுள்ளது.
ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் வசதிக்காக செல்வதில்லை என்றும் சீனாவிடம் இருந்து புதுப்பிக்கப்பட்ட கடன்களை பெறவுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam