கொழும்பை வந்தடைந்த சீனாவின் ஆர்க் பீஸ் கப்பல்
ஆர்க் பீஸ் (Ark Peace) எனப்படும் சீன கடற்படையின் மருத்துவ கப்பல், இன்று (21) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பலானது, இலங்கை மக்களுக்கு வைத்திய பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளை வழங்குவதற்காக நாளை முதல் 27ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு இலங்கை கடற்படை, மரபு ரீதியில் வரவேற்பு அளித்துள்ளது.
மருத்துவ சிகிச்சைகள்
மேலும், ஆர்க் பீஸ் கப்பலின் ஊடான மருத்துவ சேவைகளில் இலங்கை கடற்படையின் மருத்துவத் துறையினரும் இணைந்து மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருத்துவ கிளினிக்களை வழங்கவுள்ளனர்.
அதேவேளை, இதன்போது இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவு, கடற்படை, கடல்சார் பீடம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தில் அதிகாரிகள் பயிற்சி உட்பட இலங்கை கடற்படை வீரர்களுக்கு கப்பலின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன.
அத்துடன், குறித்த கப்பல் எதிர்வரும் 28ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - கஜி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri
