சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை இறக்குமதி செய்த சீன பிரஜை ஒருவர் கைது
சட்டவிரோதமாக 658 மதுபான போத்தல்களை இறக்குமதி செய்த சீன பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.
அல்பிரட் ஹவுஸ் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்காகவே இந்த மதுபான போத்தல்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே இவ்வாறாக மதுபான போத்தல்கள் இறக்குமதி செய்யப்பட்டு குறித்த பல்பொருள் அங்காடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இலங்கையின் தனியொருவர் வைத்திருக்கக்கூடிய மதுபான போத்தல்கள் என்ற வரையை
மீறியக் குற்றச்சாட்டுக்காகவே சீன பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.