இஸ்ரேலின் இராஜதந்திர சூழ்ச்சியில் சிக்கிய ட்ரம்ப்!நெருங்கும் ஆபத்து
தற்போதைய போர் நிலைமையை பார்க்கின்ற பொழுது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒரு இக்கட்டான சுழ்நிலைக்கு தள்ளியுள்ளதாக பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கடந்த 2025 ஆம் ஆண்டு இடம்பெற்ற தாக்குதலுக்கும் இப்போது நடைபெறுகின்ற ஈரானுடைய தாக்குதலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் போரை இஸ்ரேலிய பிரதமரும்,அமெரிக்க ஜனாதிபதியும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடாத்த திட்டமிட்டு இருந்தார்கள்.அதற்கு இன்னொரு காரணம் வெனிசுலாவில் நடைபெற்ற சிறப்பு நடவடிக்கை.
நாங்கள் பல தடைவை கூறி இருந்தோம்.ஈரான் வெனிசுலா அல்ல என்று.
ட்ரம்பின் அனுபவமின்மையை பெஞ்சமின் நெதன்யாகு தனது அனுபவத்தினால் வென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri