பாரம்பரிய மருந்துகளால் கோவிட்டை கட்டுப்படுத்திய சீனா
கோவிட் தடுப்பூசி பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் சீனா தனது நாட்டில் கோவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதாக விரிவுரையாளர் நெம்சிறி ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
சீனா தனது நாட்டில் கோவிட் வை கட்டுப்படுத்த பாரம்பரிய மருந்தை பயன்படுத்தியது எனவும் இந்த மருந்து மிகவும் பிரபலமானதால், சீனாவுக்கு 30 பில்லியன் யுவான் வருமானமாக கிடைத்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
தாய்லாந்து, தென் கொரியா போன்ற நாடுகள் கோவிட் வை கட்டுப்படுத்த தனது பாரம்பரிய மருந்துகளையே பயன்படுத்தின. நாமும் எமது பாரம்பரிய மருந்துகளை பயன்படுத்தி இருந்தால் கோவிட் வை கட்டுப்படுத்தி இருக்க முடியும்.
தடுப்பூசி தயாரிப்பது என்பது வர்த்தகம் எனவும் சீனா இது போன்ற சந்தர்ப்பங்களை எந்த வகையிலும் கைவிடாது.
இதனால், சீனா தடுப்பூசியை தயாரித்து வருகிறது எனவும் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.