புடினுடன் கூட்டு சேரும் இரண்டு நாடுகளின் வீரர்கள்!உக்ரைன் கொடுத்த பதிலடி
சீனா மற்றும் வட கொரியா நாடுகளிலுள்ள தன்னார்வலர்களான வீரர்கள் புடினுடைய அழைப்புக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதியை சந்தித்ததைத் தொடர்ந் இவ்வாறானதொரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை புடினுடைய ஆதரவாளரான Vladimir Solovyov தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,புடினுடைய கட்டளைக்காக படைகள் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். சீனா மற்றும் வட கொரியாவிலிருந்து தன்னார்வலர்களைக் காண தான் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் கேலியான டுவிட்டர் பதிவு
ஆனால் உக்ரைன் உள்துறை அமைச்சரான Anton Gersshchenko,ரஷ்யாவின் இந்த கருத்தை கேலி செய்துள்ளது.
Solovyev looks forward to seeing volunteers from China and North Korea fighting for Russia.
— Anton Gerashchenko (@Gerashchenko_en) April 7, 2023
What happened to the "second army in the world"? pic.twitter.com/PD1VkUKlps
ரஷ்யாவுக்காக போரிட, சீனா மற்றும் வட கொரியாவிலிருந்து தன்னார்வலர்களைக் காண தான் காத்திருப்பதாக Solovyev தெரிவித்துள்ளார்.
அப்படியாயின் உலகின் இரண்டாவது இராணுவத்திற்கு என்ன ஆயிற்று என கேலியாக ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.