ரஷ்யாவின் மிகக் கொடூரமான தாக்குதல்கள்! முற்றிலுமாக அகற்றப்படும் மரியுபோல் தொடருந்து நிலையம்
உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள தொடருந்து நிலையத்தை ரஷ்ய படைகள் முற்றிலுமாக அகற்றி வருவதாக நாடுகடத்தப்பட்ட மரியுபோல் நகரத்தின் மேயரின் ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ(Petro Andriushchenko) தெரிவித்துள்ளார்.
போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய இராணுவ படையின் தொடர் தாக்குதலுக்கு உள்ளான மரியுபோல் நகரம், கடந்த ஆண்டு மே மாதம் முற்றிலுமாக ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றது.
அதிலிருந்து மரியுபோல் நகரில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து எந்தவொரு புதிய தகவலும் அவ்வளவாக வெளியே வராமல் இருந்தது.

இணையத்தில் வெளியான காணொளி
இந்நிலையில் உக்ரைனிய மேயரின் நாடுகடத்தப்பட்ட ஆலோசகர் பெட்ரோ ஆண்ட்ரியுஷ்செங்கோ(Petro Andriushchenko), மரியுபோல் நகரின் தொடருந்து நிலையத்தின் காணொளியை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் மரியுபோல் நகரின் தொடருந்து நிலையம் கிட்டத்தட்ட முற்றிலுமாக ரஷ்ய படைகளால் அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதை காணொளி காட்டுகின்றது.
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவலில், ஆக்கிரமிப்பாளர்கள் மரியுபோல் தொடருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள தனியார் கட்டிடங்களை அப்புறப்படுத்துவதாகவும், அதற்கான காரணம் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய படைகள் மிகப்பெரிய தளபாட மையம்
அத்துடன், அந்த இடத்தில் ரஷ்ய படைகள் மிகப்பெரிய தளபாட மையத்தை உருவாக்க விரும்பலாம் என்றும், ஆனால் அவை தெளிவாக தெரியவில்லை என்று ஆண்ட்ரியுஷ்செங்கோ தெரிவித்துள்ளார்.
மரியுபோல் தொடருந்து நிலையம் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மீண்டும் கட்டப்பட்டது .
போர் தொடங்கிய உடனேயே இந்த நகரம் மனிதாபிமான உதவியிலிருந்து துண்டிக்கப்பட்டது மற்றும் போரின் போது ரஷ்யப் படைகளால் மிகக் கொடூரமான தாக்குதல்கள் நடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மரியுபோல் நகரத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபத்தில் விஜயம் மேற்கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, ரஷ்யா மரியுபோலில் ஒரு தளபாட மையத்தை உருவாக்கக்கூடும் என்ற செய்தி வெளிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam