வெளியில் சென்ற கணவர் இதுவரை வீடு திரும்பவே இல்லை! பட்டினியுடன் ஆதரவற்று தவிக்கும் பிள்ளைகள்
புதுக்குடியிருப்பு, தேவிபுரத்தினை சேர்ந்த இராஜேந்திரம் உதயராணி என்பவர் ஒவ்வொரு நாளையும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தனது இரண்டு பிள்ளைகளுடன் கண்ணீருடன் கழித்து வருகின்றார்.
இவர் தினமும் கூலி வேலை செய்து தனது இரண்டு பிள்ளைகளுக்கான கல்வி மற்றும் பொருளாதார தேவைகளை நிவர்த்தி செய்து வருகிறார்.எனினும் அவரை பிரச்சினைகள் விட்டபாடில்லை. கடந்த 2016 ஆம் ஆண்டு வியாபார நோக்கில் சென்ற கணவனை காணாத நிலையில் இன்றுவரை கணவனை தேடி வருகின்றார்.
இவர் தனது ஆறா துயரங்களையும் கண்ணீருடன் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற நிகழ்ச்சியினூடாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், இவர்கள் வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் 'என் இனமே என் சனமே' என்ற காணொளி ஊடாக உங்கள் பார்வைக்கு, இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600