சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக 500 மேற்பட்ட சிறுவர்கள் எதிர்ப்பு ஊர்வலம் (photos)
மலையகப்பகுதியில் நடைபெறுகின்ற சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 500 மேற்பட்ட சிறுவர்கள் எதிர்ப்பு ஊர்வலமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இந்த எதிர்ப்பு ஊர்வலமானது நேற்று (03.26.2023) கொட்டகலையில் நடைபெற்றுள்ளது.
குறித்த ஊர்வலம் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக ஆரம்பித்து கொட்டகலை கொமர்சல் பகுதியில் அமைந்துள்ள லேக் விளையாட்டு மைதானத்தினை வந்தடைந்துள்ளது.
விழிப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறுவர்கள் பதாதைகளையும்,சுலோக அட்டைகளையும் காட்சிபடுத்தி சிறுவர் வாழ்க்கையை அழிக்காதே போன்ற கோசங்களை எழுப்பிய வண்ணம் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு எதிராக கையொப்பமிடல்
அதனை தொடர்ந்து ஒளிச்சுடர் ஏற்றி சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக செயற்படுவதற்கு கையொப்ப பலகையில் கையொப்பம் இடப்பட்டது.
இந்நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பிரதேச மற்றும் தோட்ட முகாமையாளர்கள், கொட்டகலை வைத்திய
பணிப்பாளர், கிராம சேவகர்கள், வர்த்தக சங்க தலைவர்கள், அரச மற்றும் அரச
சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
