இலங்கையில் கோவிட்டால் அதிகம் பாதிப்படையும் சிறுவர்கள் - கொழும்பில் 15 பேர் வைத்தியசாலையில்
இலங்கையில் கோவிட் வைரஸினால் பாதிக்கப்பட்ட 15 சிறுவர்கள் கொழும்பு IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் பணிப்பாளரும் வைத்தியருமான ஹசித அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆனாலும் எந்தவொரு சிறுவர்கள் எவருக்கும் கடுமையான பாதிப்புகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, புதிய கோவிட் அலை மூலம் சிறுவர்களே அதிகமாக பாதிக்கப்படுவதாக வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார். மேலும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிப்பு இருப்பதாகவும் கூறினார்.
தற்போது கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, IDH வைத்தியசாலையில் கடுமையான இட நெரிசலில் ஏற்பட்டுள்ளது. எனினும் நிலைமை சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்பட்டு வருவதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.