சிறுவர்கள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்லாமபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் பாராட்டத்தக்க சிறுவர்களை எவ்வாறு உருவாக்குவது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது
பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிஷாத் தலைமையில் இன்று (28) பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சிறுவர் பராமரிப்பு சேவைகள்
குறித்த கருத்தரங்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் நிதி ஒதுக்கீட்டில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.