சிறுவர் கடத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவுறுத்தல்
சிறுவர் கடத்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படும் தவறான பதிவொன்று தொடர்பில் பொலிஸார் நேற்று (18.05.2023) அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளனர்.
குறித்த அறிக்கையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வரும் சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழுவொன்று தொடர்பில் அக்மீமன பொலிஸ் நிலையத்தின் ஊடாக அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் அக்மீமன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விளக்கமளித்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
இதன்படி, சிறுவர்களை கடத்த முயற்சிக்கும் குழு தொடர்பில் அக்மீமன பொலிஸாரினால் சமூக ஊடகங்கள் ஊடாக எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அக்மீமன மற்றும் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் அவ்வாறான சிறுவர் கடத்தல் அல்லது முயற்சிகள் எதுவும் பதிவாகவில்லை எனவும் அக்மீமன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் தவறானவை எனவும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
