வடக்கில் தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை!! ஒரே மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் தெரியுமா?

Mannar Sri Lanka
By Dhayani Aug 14, 2023 02:35 PM GMT
Report

 இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தில் வருடத்திற்கு 23 க்கும் அதிகமான பெண்களுக்கு எதிரான வன்முறை, துஸ்பிரியோகம், பாலியல் சீண்டல், பாலியல் வல்லுறவு போன்ற சம்பவங்கள் பதிவாகி வருவதுடன் 2018 க்கு பின்னர் துஸ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டம்

மன்னார் மாவட்டத்தில் 2018 ம் ஆண்டு தொடக்கம் தற்போதைய காலப்பகுதி வரையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மாத்திரம் 31 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான- குறிப்பாக தமிழ் பேசும் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, மன்னார் மாவட்ட பொது பொலிஸ் அத்தியட்சகர் காரியலயத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக கோரப்பட்ட தகவலின் பிரகாரம் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் வழங்கிய தகவல்களின் பிரகாரம் கடந்த 2021 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் அதிகபட்சமாக 11 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வடக்கில் தமிழ் பெண்கள் மீது பாலியல் வன்முறை!! ஒரே மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர் தெரியுமா? | Child Protection In Mannar

அதே நேரம் 2017 ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளின் தலா ஒன்றாக காணப்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டு 4 ஆகவும் 2019 ஆம் ஆண்டு 5 ஆகவும் 2020 ஆண்டு 4 ஆகவும் 2021 ஆம் ஆண்டு 11.

அதே நேரம் 2022 ஆண்டு 4 சம்பவங்களும் 2023 முதல் ஆறுமாத காலப்பகுதியில் 3 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. அதாவது 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் சராசரியாக வருடம் ஒன்றுக்கு 5 மேற்பட்ட பாலியல் வல்லுறவு சம்பவங்கள் மன்னாரில் பதிவாகி வருகின்றன.

2015 ஆண்டு தொடக்கம் தற்போது வரையான 8வருட காலப்பகுதியில் காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு எதிரான 113 பாலியல் துஸ்பிரோயாகம் சம்மந்தப்பட்ட முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த 113 முறைப்பாடுகள் தொடர்பிலும் 113 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அந்த திணைக்களம் தகவல் வழங்கியுள்ளது. குறிப்பாக 2015 ஆண்டு 16 துஸ்பிரயோக சம்பவங்களும் 2016 ஆண்டு 17 சம்பவங்களும் 2017 ஆண்டு 17 சம்பவங்களும் 2018 ஆண்டு 16 சம்பவங்களும் 2019 ஆண்டு 8 சம்பவங்களும் 2020 ஆண்டு 11 சம்பவங்களும் 2021 ஆண்டு 7 சம்பவங்களும் 2022 ஆண்டு 15 சம்பவங்களும் இந்த வருடத்தின் ஆரம்ப பகுதி வரையான 6 மாத காலப்பகுதியில் 6 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Gallery

இவ்வாறான நிலையில் மன்னார் மாவட்டத்தில் ஆண்டுக்கு 18க்கும் அதிகமான பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவருகின்ற போதைப்பொருள் பானை ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது.

அதேவேளை, யுத்தம் காரணமான உளவளப் பிரச்சனையும் இதுபோன்ற கொடூர எண்ணங்கள் ஏற்படுவதற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.

இது தொடர்பான முழுமையான ஆய்வுகள் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று கூறுகின்றார்கள் பொதுமக்கள். 


மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US