அம்பாறை மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகம்
சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களை
கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர்,
மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்களில் சிறுவர் மற்றும்
பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் உத்தியோக பூர்வமாக திறந்து
வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வானது, இன்று (19.06.2024) இடம்பெற்றுள்ளது.
கலந்து கொண்டோர்
இதன்போது, அம்பாறை - சாய்ந்தமருது, நிந்தவூர், இறக்காமம் பொலிஸ் நிலையங்களில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
மேலும், நாடு முழுவதும் உருவாக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையங்களில் அரசாங்கத்தின் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 3 பொலிஸ் நிலையங்களில் இப்பணியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |