திருகோணமலையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு: கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர்
திருகோணமலை மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று தம்பலகாமம் பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் "சரோஜா குழந்தை பராமரிப்பு திட்டம்" மேற்கொண்டுவரும் நடவடிக்கையின் கீழ் நடைபெற்றது.
இதன்போது அவர் கூறுகையில்,
2025 ஜனவரி 1 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் மாவட்டத்தில் 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள்
- நிலாவெளி – 4
- உப்புவெளி – 3
- ஸ்ரீபுரம் – 4
- மூதூர் – 3
- கிண்ணியா – 4
- புல்மோட்டை – 1
- திருகோணமலை – 1
- துறைமுகம் – 1
மேலும், மாவட்டத்திலேயே 371 பாதுகாப்பற்ற சிறுவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விபரங்கள்:
- உப்புவெளி – 60
- திருகோணமலை – 43
- துறைமுகம் – 5
- சீனக்குடா – 18
- கிண்ணியா – 43
- மூதூர் – 47
- சம்பூர் – 52
- நிலாவெளி – 24
- குச்சவெளி – 23
- புல்மோட்டை – 30
- ஸ்ரீபுரம் – 26
இவற்றை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து அரச அதிகாரிகளும் ஒருமித்து செயல்பட வேண்டும் எனவும், சிறுவர்களிடமிருந்து தகவல்களை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்திட்டங்கள் மூலம் எதிர்காலத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான வழி வகை செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.