இலங்கை பிரதம நீதியரசர் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு விஜயம்
இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன நேற்று(02.03.2026) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
நீதிமன்ற செயற்பாடுகள், கட்டட நிலவரங்கள், ஏலத்தில் விற்பனை செய்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் பார்வையிட்டு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
நீதிமன்றத்திற்கு முதல் தடவையாக வருகை
பிரதம நீதியரசர் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு முதல் தடவையாக வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த கலந்துரையாடலில் வவுனியா மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகள், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட மேலதிக நீதிபதி, சட்டத்தரனிகள், பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அலுவலக பதவி நிலை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.






ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri