சிச்சியின் ரொக்கட் : தொடரும் சர்ச்சைக் கருத்துக்கள்
"சிச்சியின் ரொக்கெட்" என்று பரவலாகக் குறிப்பிடப்படும் சுப்ரீம்சாட் செயற்கைக்கோளைச் சுற்றியுள்ள சர்ச்சை குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன் நிலை மற்றும் வருமானம் குறித்து நாடாளுமன்றத்தில் வெளியான முரண்பட்ட அறிக்கைகளை அடுத்தே அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.
செயற்கைக்கோளை தற்போது காணவில்லை
சுப்ரீம்சாட் திட்டத்திலிருந்து கிடைக்கும் வருமானம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானகவின் கேள்விக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளித்ததைத் தொடர்ந்து இந்த பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது.
இருப்பினும், அமைச்சர் வசந்த சமரசிங்க இந்தக் கூற்றை நிராகரித்திருந்தார்.
இலங்கை முதலீட்டு சபை தவறான தரவை வழங்கியதாகவும், செயற்கைக்கோளை தற்போது காணவில்லை என்றும் அவர்; குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், சுப்ரீம்சாட் தமது அறிக்கை ஒன்றை வெளியிட்டது,
நாட்டிற்கு ஏதாவது நன்மை செய்வார்கள்
அதன் செயற்கைக்கோள் 87.5° கிழக்கில் சுற்றுப்பாதையில் உள்ளது என்பதை அது மீண்டும் உறுதிப்படுத்தியது மற்றும் இந்த முயற்சிக்கு எந்த அரசாங்க நிதியும் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியது.
இந்த விடயம் தொடர்பில் இன்று கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயதிஸ்ஸ, "ஒரு செயற்கைக்கோள் இவ்வளவு அதிக வருமானத்தை ஈட்டியிருந்தால், ராஜபக்சக்கள் கடந்த 13 ஆண்டுகளாக அமைதியாக இருந்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
அவர்கள் தங்களுக்கும் பயனளிக்காமல் நாட்டிற்கு ஏதாவது நன்மை செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?"என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து நடைபெறும் விசாரணைகள் உண்மையை வெளிப்படுத்தும் என்றும், இந்தத் திட்டத்தைத் தனியாக ஆராயக்கூடாது என்றும், ராஜபக்சர்களுடன் தொடர்புடைய பிற நடவடிக்கைகளுடன் சேர்த்துக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




