மகாத்மா காந்தியை தவறாக பேசிய சாமியார் கைது
இந்திய மத்தியபிரதேச மாநிலம் கஜுராஹோ பகுதியில், ஒளிந்திருந்த காளிசரண் மஹராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவரான காளிசரண் மகாராஜ், சட்டீஸ்கர் மாநிலம் ராயப்பூரில் நடைபெற்ற ஆன்மீக மாநாட்டில் பங்கேற்று பேசியபோது, மகாத்மா காந்தி குறித்து தவறான வார்த்தையை பயன்படுத்தினார்.
அத்துடன் மகாத்மாவை சுட்டுக் கொன்ற கோட்சேவை பாராட்டி பேசினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் காங்கிரஸ் கட்சியினர் அளித்த முறைப்பாட்டை அடுத்து, காளிசரண் மகாராஜ் விடுதி ஒன்றில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார்
10 பேர் கொண்ட காவல்துறை குழு, அவரைக் கண்டுபிடித்து, கைது செய்து மீண்டும் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூருக்கு அழைத்துச் சென்றுள்ளது.
#WATCH Raipur Police arrests Kalicharan Maharaj from Madhya Pradesh's Khajuraho for alleged inflammatory speech derogating Mahatma Gandhi
— ANI (@ANI) December 30, 2021
(Video source: Police) pic.twitter.com/xP8oaQaR7G



