புதுக்குடியிருப்பு பிரதேச சபையினால் மாற்றுத்திறனாளிகளிற்கான காசோலைகள் வழங்கி வைப்பு
புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால் மாற்றுத்திறனாளிகளிற்கான காசோலைகள் கொடுப்பனவு உதவித்திட்டம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசசபை எல்லைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 32 மாற்றுதிறனாளிகளுக்கான மாதம் 5000 ரூபா வீதம் ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவு காசோலை உதவிதிட்டம் இன்றையதினம் (08.09.2025) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 19 பயனாளிகளுக்கு இன்றையதினம் ஒருவருக்கு மூன்று மாதற்குரிய காசோலைகள் 15,000 ரூபா விகிதம் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன் ஏனைய மூன்று மாதங்களிற்கு 5000 ரூபா வீதம் வழங்கி வைக்கப்பட இருக்கின்றது.
அத்தோடு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏனைய13 பயனாளிகளுக்கும் எதிர்வரும் நாட்களில் வழங்கப்பட இருக்கின்றது.
சபை அமைப்பதற்கு முன்னர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயலாளரினால் உள்ளூராட்சி மன்ற வரவு செலவுதிட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் விஷேட முன்னனுமதிகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கமைவாக வடக்கு மாகாண ஆளுனரின் அனுமதி பெறப்பட்டு இன்றையதினம் மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.











அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan
