சென்னை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்! இலங்கை பெண்கள் விமான நிலையத்தில் கைது
இலங்கையிலிருந்து இந்தியா சென்ற இரு பெண்கள் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்த நிலையில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்து இறங்கும் பயணிகளை தீவிரமாக கண்காணித்துள்ளனர்.
பிண்ணனியில் உள்ளவர்கள் தொடர்பில் விசாரணை
இதன்போது கொழும்பிலிருந்து சென்னை வந்த விமானத்தில் வந்து இறங்கிய 2 இலங்கை பெண்களை சந்தேகத்தின் பேரில் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்யப்பட்டுள்ளது.
இதன்போது 2 பெண்களும் தங்களது உள்ளாடைகளில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.25 இலட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 516 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேற்படி 2 பெண்களையும் கைது செய்த தமிழக சுங்க அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 53 நிமிடங்கள் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
