செம்மணி தமிழின படுகொலைகளும் சிங்களவர்களின் மனநிலையும்

Anura Kumara Dissanayaka Canada chemmani mass graves jaffna
By Vethu Jul 02, 2025 01:50 AM GMT
Report

இலங்கையில் தமிழின படுகொலையின் மற்றுமொரு சாட்சியமான செம்மணி மனித புதைகுழி இன்று மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழர்களை வலிந்து அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டதுடன், அவ்வாறான ஒரு துன்பியல் சம்பவங்களே நடைபெறவில்லை என இன்று வரை வாதிட்டு வருகிறது.

இனப்படுகொலைகளை மூடிமறைக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று செம்மணி மனித புதைகுழியில் இருந்து வெளிவரும் மனித எச்சங்கள் அரசிற்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.

அண்மையில் கனடாவின் பிரம்டன் நகரில் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினை நினைவு கூரும் வகையில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

மேல்நீதிமன்றில் மீண்டும் ஆரம்பமாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்!

மேல்நீதிமன்றில் மீண்டும் ஆரம்பமாகவுள்ள உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள்!

நினைவு தூபி

கனடா அரசின் முழுமையான ஆதரவுடன் இந்த நினைவு தூபி அமைக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தது.

செம்மணி தமிழின படுகொலைகளும் சிங்களவர்களின் மனநிலையும் | Chemmani Sindhubathi Mass Grave Sinhala Media

இலங்கையில் எந்தவொரு இனவழிப்பும் நடைபெறவில்லை. இனவழிப்பு என்ற சொற்பதம் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என சமகால அநுர அரசாங்கம் அறிவித்திருந்தது. 

குறித்த நினைவு தூபி தொடர்பில் இலங்கையின் கடும்போக்குவாத சிங்கள ஊடகங்கள் கடுமையாக சாடியிருந்தன. அதனை உடைத்து அழிக்க வேண்டும் என கோஷமிட்டன.

தென்னிலங்கையில் சிங்களவர்கள் பலர் கொந்தளித்திருந்தனர். தமது உச்சகட்ட இன வன்மத்தை சமூக ஊடங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.

இன்று செம்மணி மனித புதைகுழி சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோக்கர் டரக்ர் விஜயம் செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் யுவதி உள்ளிட்ட இருவர் கைது

முல்லைத்தீவில் யுவதி உள்ளிட்ட இருவர் கைது

செம்மணி புதைகுழி

இதன்மூலம் சர்வதேச ரீதியாக செம்மணி புதைகுழி கவனம் பெற்றுள்ளது. எனினும் சிங்கள ஊடங்கள் மௌனம் சாதிக்கின்றன. அது தொடர்பான எந்தவொரு தகவல்களையும் வெளியிடாமல் தவிர்த்து வருகின்றன.

செம்மணி தமிழின படுகொலைகளும் சிங்களவர்களின் மனநிலையும் | Chemmani Sindhubathi Mass Grave Sinhala Media

பெரும்பான்மையான சிங்களவர்கள் கடுமையான மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை மீட்கப்பட்டுள்ள 33 மனித எலும்புக்கூடுகளும் விடுதலைப் புலிகளினது என்று சாடுகின்றனர்.

புத்தக பையுடன் பாடசாலை செல்லும் பிள்ளை கூட அவர்களின் பார்வையில் பயங்கரவாதிகளாக எண்ணத் தோன்றுகின்றது. எனினும் ஆங்காங்கே ஒரு சில சிங்கள இளைஞர்கள் செம்மணி மனித புதைகுழி குறித்து கவலை வெளியிட்டுள்ளனர். அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.

மறுபுறம் காசாவில் கொல்லப்படும் அப்பாவி மக்களுக்காக இலங்கையில் இரத்த கண்ணீர் வடிக்கும் சமூக ஊடக போராளிகள், செம்மணி புதைகுழி தொடர்பில் எந்தவொரு தகவல்களை வெளியிடவில்லை.

செம்மணி விவகாரத்தில் AI தொழிநுட்ப பயன்பாடு.. விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

செம்மணி விவகாரத்தில் AI தொழிநுட்ப பயன்பாடு.. விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

 காத்திரமான விசாரணை

காலங்கள் எவ்வளவு மாறினாலும், இன ரீதியான வன்மம் மட்டும் அவர்களிடம் மாறவில்லை என்பதற்கு இதுவொரு சிறந்த உதாரணமாகும்.

செம்மணி தமிழின படுகொலைகளும் சிங்களவர்களின் மனநிலையும் | Chemmani Sindhubathi Mass Grave Sinhala Media

இவ்வாறான நிலையில் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் காத்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சமகால அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

எனினும் அது எவ்வளவு சாத்தியம் என்பது கண்கூடு. இலங்கையில் இனவழிப்பு ஒன்று நடைபெறவில்லை என்ற கோட்பாட்டை கொண்ட அரசாங்கம் அது தொடர்பில் நியானமான விசாரணைகளை மேற்கொள்ளுமா என்பது சந்தேகமே. 


பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Vethu அவரால் எழுதப்பட்டு, 02 July, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US